சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

SHARE

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரின் போது அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐ-க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதை நிறுத்த வேண்டும். அந்த முடிவை கைவிட வேண்டும். ஏனென்றால் தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே உத்தரவை ரத்து செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் பிசிசிஐயின் விதிமுறைகளில் 38 (4)-ன் படி ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக்கூடாது. தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், இந்திய அணி ஆலோசகராகவும் செயல்பட முடியாது. எனவே பிசிசிஐ-ன் அபெக்ஸ் கவுன்சில் இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சஞ்சீவ் குப்தா கடந்த காலங்களில் இதுபோன்ற பல புகார்களை வீரர்களுக்கு எதிராக அளித்துள்ளதால் இதனை பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலின் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

Admin

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

Leave a Comment