இந்தியாவின் தங்க மகனாக கொண்டாடப்படும் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் மத்திய அரசின் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள், பிசிசிஐ, ஆனந்த் மஹிந்திரா என பல்வேறு தரப்பினரும் பரிசுத்தொகை அறிவித்தனர்.
இதனிடையே நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என அவரது பயிற்சியாளர் உவே ஹான் குற்றம் சாட்டியுள்ளார்.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/08/download-1.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/08/download-1.jpeg)
ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான் கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது மத்திய விளையாட்டுத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை.விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர்.
ஆசிய மற்றும் மாமன்வெல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவருக்கு JSW நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. அதுவே நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல உதவியுள்ளது எனவும்,உவே ஹான் கூறியுள்ளார்.
ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி பிரதமர் மோடியால் வீரர்களுக்கு வாழ்த்து சொல்ல முடிகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.