சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

SHARE

சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘இலக்கிய வீதி’ சார்பில் பதிப்புலகின் பேரொளிகள் என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்ட செய்திகள் இவை.

நேற்றைய மாலைப் பொழுது இனிமையானது இலக்கிய வீதியின் நிகழ்வால்! நம்மில் பலர் உ.வே.சாவை அறிந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரும் , அவருக்கு இணையானவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு அன்றே ஆனந்த விகடன் அவரிடம் என் சரிதை என்ற காலத்தால் அழியாத கட்டுரை தொடரை வாங்கி பிரசுரித்து இன்றளவும் அது பல பதிப்புகளை கண்ட நூலாகும்.

சி.வை.தாமோதரம்பிள்ளை இல்லாவிடில் நமக்கு கலித் தொகை கிடைத்திருக்காது. நீதி நெறி நூலை வெளிக் கொண்டு வந்தவரும் இவர் தான். தொல்காப்பிய பொருள் அதிகாரத்தையும் கொண்டு வந்துள்ளார். இப்படி பல சங்க நூல்கள் தமிழுக்கு இவரது கொடைகள்.

இவரது பதிப்புல போராட்டங்களையும், வாழ்வையும் குறித்து முனைவர் ப.சரவணன் மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வளவு நுட்பமான பார்வையுடன், ஈடுபாட்டுடன் அவரது உரை இருந்தது! இந்த உரைக்கு மேலும் நேரம் தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு இலக்கிய அமைப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் – அதை நிறுவியவரே மறைந்த பின்னும் தொடர முடிகிறதென்றால் – அது நானறிந்த வரை இலக்கிய வீதியாகத் தான் இருக்க முடியும். பெயருக்கேற்றார் போலவே இனியவனாகத் திகழ்ந்த பெரியவர் இனியவன் தமிழ் படைப்பாளுமைகளுடன் கொண்ட நெருக்கமும், பிணைப்பும் அலாதியானது.

அவருக்கு பிறகு அவரது மகள் வாசுகி பத்ரி நாராயணன் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் அதன் துணை செயலாளர் துரை.லட்சுமிபதி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

போய்ட்டு வர்றோம்” – ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற்றம்…

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

Leave a Comment