தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

SHARE

கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்து 877 ரூபாய்க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 835 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று 25 ரூபாய் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

Leave a Comment