அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

SHARE

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பங்கேற்காதது பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சசிகலா ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார்.

அதிமுகவினரிடம் சசிகலா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் ஓபிஎஸ் மாவட்ட செயலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தமக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவரின் சொந்த வீட்டின் கிரக பிரவேச பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

Leave a Comment