ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

SHARE

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான்  வந்ததால்
அதிபர் அஷ்ரப் கானி, நாட்டை விட்டு வெளியேறுமாறு என கூறப்பட்டது.

நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெலிகாப்டரிலும்  பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்தபோது, அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்

இந்த நிலையில்காபூலைவிட்டு வெளியேறிய பின்பு அதிபா் அஷ்ரஃப் கனி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள முதல் பதிவில்,

ஆயுதங்களுடன் தலிபான்கள் அதிபா் மாளிகைக்குள் நுழைய வேண்டும் அல்லது 20 ஆண்டுகளாக எனது வாழ்நாளை அா்ப்பணித்து பாதுகாத்த எனது நாட்டைவிட்டு நான் வெளியேற வேண்டும் என்பதில் ஏதாவது ஒன்றை தோவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தேன்.

நாட்டு மக்கள் தொடா்ந்து கொல்லப்பட்டும், காபூல் நகரம் அழிக்கப்பட்டும் மிகப்பெரிய மனித பேரிடா் ஏற்பட்டிருக்கும். என்னை வெளியேற்றுவதில் தலிபான்கள் வெற்றி கண்டுள்ளனா். ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.

கத்தி, துப்பாக்கிகளுடன் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

தற்போது நாட்டு மக்களின் கெளரவம், வளம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவா்களின் பொறுப்பாகும். அவா்கள் மக்கள் மனதை வெல்லவில்லை. ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றியதால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பது வரலாற்றில் பதிவானதே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளாா்.


க வேண்டியது அவா்களின் பொறுப்பாகும். அவா்கள் மக்கள் மனதை வெல்லவில்லை. ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றியதால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பது வரலாற்றில் பதிவானதே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளாா்ா


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

Leave a Comment