துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி, சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, பிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிராங்க் ஹோகர்பீட்ஸ் பேசிய வீடியோவை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
நிலநடுங்களின் தீவிரம் 5 நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: மண்டலம் 1, மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4 மற்றும் மண்டலம் 5, கடைசியாக மிகவும் ஆபத்தானது. இருப்பினும், இந்தியாவில், பகுதிகள் 4 நில அதிர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


குஜராத், இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மணிப்பூர், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்கள் மண்டலம் 5 க்குள் வருவதால், அதிக தீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26, 2001 அன்று, குஜராத்தில் 7.6 ரிக்டர் அளவிலான அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. புஜ் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அந்த பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.