- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Nagappan
உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் எதிரணியை மொத்தமாக வீழ்த்திவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராஸ் டெய்லர். அவர் எழுதியிருப்பதாவது, “இப்போது இந்திய அணி வலுவாக அரையிறுதிக்கு வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த அரையிறுதிக்கு இந்திய அணி வலுவாக வந்து நின்றது. ஆனால், நாங்களோ நெட் ரன்ரேட்டுக்காகப் போராடி அந்த இடத்திற்கு வந்திருந்தோம். இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் தருவாயில் நியூசிலாந்து ஓர் அபாயகரமான அணி. இந்திய அணியைப் எதிர்க்கும் வல்லமை உடையது நியூசிலாந்து மட்டுமே. மும்பை மைதானத்தின் சூழலைப் புரிந்து கொண்டு தகவமைத்து ஆடுவது நியூசிலாந்துக்குச் சவாலாக இருக்க வாய்ப்புண்டு. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே முதல் 10 ஓவர்கள் ரொம்பவே முக்கியம்.…
சென்னையில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட சமபவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று காலை 10:15 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் ரோடு அருகே கட்டிடம் ஒன்று குலுங்கியதாக கூறி அதில் இருந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் ரோடு அருகே கட்டிடம் ஒன்று குலுங்கியதாக கூறி அதில் இருந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நிலநடுக்கம் குறித்த உலக மக்களின் பீதியும் அதிகரித்து உள்ளது. இதனால் லேசான நடுக்கம் ஏற்பட்டாலும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது . இந்த நிலையில்தான் சென்னை ராயப்பேட்டையில் கட்டிடம் குழுங்கியதை பலர் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து செனனியில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து…
போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?
உக்ரைன் ரஷ்யா போர் உச்சத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் சென்றுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர்: உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரிமாதம் 24 ம் தேதி தொடங்கிய நிலையில் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது , இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உள்ளன . குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு தனது ஆதரவினை கொடுத்து வருகின்றது. அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாடு ரஷ்யாவிற்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளது, உக்ரைன் போரினால் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் போர் நடக்கும் யுத்த பூமியான உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சென்று வந்துள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக போர் நடக்கும் இடத்திற்கு அமெரிக்க அதிபர்கள் யாரும் சென்று வந்ததில்லை தற்போது ஜோப்டைன் உக்ரைன் சென்றுள்ளதன் மூலமாக புதிய வரலாற்றை படைத்துள்ளார்.…
”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துள்ளது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரைக் குறித்து மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பேசிய நெகிழ்ச்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அசத்தப் போவது யாரு? காமெடி டைம் போன்ற நிகழ்ச்சிகளிலும், நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் , கில்லி, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. இவர் நடிகராக மட்டுமின்றி அரசியல் விமர்சகராகவும் இருந்தார். தனிப்பட்ட வாழ்வில் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகராக இருந்த மயில்சாமி கஷ்டப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இவரது நடிப்பைவிட் இவரது சமூகக் கருத்துகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் இன்னும் கூடுதல் ரசிகர்கள் உண்டு. சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டுத் விட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக மயில்சாமி…
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 121 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இந்தியாவின் கௌதம் அதானி. கடந்த ஓராண்டில் மட்டும் அதானியின் சொத்தில் 44 பில்லியன் டாலர் கூடியிருந்தது. அடுத்த சில வாரங்களில் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அதானி அடைந்துவிடுவார் என உலக பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த வேளையில்தான், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி, அதானி குழுமத்தை சரவரவென இழுத்து கீழே தள்ளியிருக்கிறது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் மதிப்பு 71 விழுக்காடு வீழ்ந்திருக்கிறது. டாப் 3 என்ற நிலையிலிருந்த அதானி, இன்றைக்கு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 24-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதானியின் மொத்த சொத்து மதிப்பு 52.4 பில்லியன் டாலராக சுருங்கிவிட்டது. பங்குகளின் விலையை உயர்த்திக் காண்பிக்க அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட இந்த…
வருகிற சனிக்கிழமை (18..2.2023) அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சிவராத்திரி திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல பிரபலங்கள் உலகளவில் கலந்து கொண்டு பூஜைகளும், ஆடல்களும் பாடல்களுமாக அத்தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். அதிலும், திரை பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உட்பட பல பெரும் நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல பல முக்கிய அரசியல் பிரமுகர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வது வழக்கம். வருகிற சனிக்கிழமை (18..2.2023) அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சிவராத்திரி திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல பிரபலங்கள் உலகளவில் கலந்து கொண்டு பூஜைகளும், ஆடல்களும் பாடல்களுமாக அத்தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். அதிலும், திரை பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா…
கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மாரடைப்பு வருவதாக செய்திகள் வெளியாகிஅச்சத்தைக் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு ஆபத்தா? அது குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். எஸ்.ஏ.டி.எஸ். (SADS – Sudden arrhythmic death syndrome) எனப்படும் இளம் வயது மாரடைப்பானது கொரோனா தடுப்பூசிகள் வருவதற்கு முன்னர் இருந்தே இருக்கும் ஒரு நிகழ்வுதான். கார்டியோ மையோபதி என்னும் இதய தசை பாதிப்புகளும் திடீர் மரணங்களை உண்டாக்க கூடும். இதய தசைகளில் மிக அதிக அளவில் அழுத்தம் அல்லது வேலைப்பளு சுமத்தப்படும் போது அவை இதயம் அல்லது அதில் உள்ள திசுக்களை பாதித்து திடீர் மரணத்திற்கு வழி வகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இளம் வயதினருடைய மாரடைப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் – என தடித்த இதயத் தசைகள்இதயத்துடிப்பு பிரச்சினைகள்மார்புகளில் ஏற்பட்டுள்ள காயம்பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு – ஆகியவற்றை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். மேலும்…
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை; அவர் மரணம் அடைந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது இலங்கையில் போராளிகள் நடத்திய போரின் போது இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது பிரபாகரன் இறந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மரணம் குறைத்த சில குழப்பமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். இந்தநிலையில் தற்போது பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும் இது அவரது அனுமதியுடன் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ,நெடுமாறன் செய்தியாளர்களின் முன்னிலையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தகவலை இலங்கை ராணுவம் தரப்பில் மறுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் கூறுகையில், பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டுவிட்டார்; அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தோம். 2009ம் ஆண்டு…
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும், செய்தி ஊடகங்களில் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி பரந்தூரில் தொடரும் மக்கள் போராட்டம். தங்கள் நிலத்தைக் காக்க டெல்லியில் விவசாயிகள் போராடிய போது அங்கு செய்தியாளர்களை அனுப்பிய ஊடகங்கள் கூட, சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரைக் கண்டுகொள்ளவில்லை. என்னதான் நடக்கிறது பரந்தூரில்? போராட்டத்தின் பின்னணி என்ன?. பரந்தூர் விமான நிலையம் பசுமையான நெல் வயல்கள், அவ்வப்போது வாகனங்கள் வந்து செல்லும் சாலைகள், வீடுகள், எப்போது நீர் நிறைந்திருக்கும் ஏரிகள், 1940களில் கட்டப்பட்ட ஒரு தொடக்கப் பள்ளி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கிராமத்தின் பெயர் நெல்வாய். தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக முற்றிலும் அழியப்போகும் கிராமங்களில் நெல்வாயும் ஒன்று. பாதிக்கப்படும் மக்கள் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நெல்வாய் போன்ற 13 ஊர்களில் உள்ள பொது மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு கிராமங்கள்…
அறிவியல் கோட்பாடுகளும், உருவாக்கமும் வெறும் கண்டுபிடிப்பு என்ற நிறைவோடு முடிந்துவிடுவதில்லை. வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது; நியதிகளை உடைத்தெறிகிறது சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வரலாற்றைச் சுழலவைத்த சக்கரம் முதல் வாழ்வை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் வரை உதாரணங்கள் சொல்லலாம். அந்த வகையில் மனித வாழ்வியல் குறித்த அடுத்த அத்தியாயம் எழுதியவர் சார்லஸ் டார்வின் டார்வின் புதிய பாதை 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர். பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும்வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர். டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார். மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானி ஆக்கியது. தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22…