திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

SHARE

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பஜக பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது எம்.ஜி.ஆர் “இன்றைக்கு நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மரியாதைக்குரிய எம்ஜிஆர் எனது நினைவுக்கு வந்தார்.

நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்கு செல்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கே மக்களிடத்தில் நான் பேசினேன். அப்போ இன்றைக்கு அவர் எங்கு பணியாற்றினாரோ அந்த மண்ணுக்கு நான் இங்கு வந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அந்த குடும்ப பாரம்பரியத்தில் இருந்து மிகப்பெரிய நல்லாட்சி நடத்தியதன் மூலம் மரியாதைக்குரிய எம் ஜி ஆர் அவர்கள் தரமான கல்வியும் நல்ல சுகாதாரத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெண்களும் அவரை மிகப் பெரிய அளவில் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் ஏழை மக்கள் அத்தனை பேரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக வரவில்லை. ஆனால், அவர் துரதிஷ்டவசமாக இன்றைக்கு திமுக தமிழகத்தில் எம்ஜிஆரை அவமதிப்பது போல அவரை கேவலப்படுத்துவது போன்ற ஒரு ஆட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர்க்கு பிறகு இந்த நாட்டில் யாராவது ஒருவர் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அமையார் ஜெயலலிதா. அவர்களின் ஆட்சி தான். அவர் தம்முடைய வாழ்க்கையை முழுவதையும் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார் என்பதை என்னால் சொல்ல முடியும். சில நாட்களுக்கு முன்னால் தான் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் இந்த மண்ணிலிருந்து அவருக்கு நான் மீண்டும் ஒரு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அது மட்டுமல்ல ஜெயலலிதா அவர்களுடன் நான் நெருங்கி பல்லாண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அவர் மக்களோடு செயல்படுத்திக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தார் என்பதை நாம் அத்தனை பேர் அறிவேன். எம்ஜிஆர் கொள்கை கடைபிடித்து அதன் மூலமாக மக்களுக்காக பணியாற்றினார் இன்றைக்கும் தமிழகத்தில் அத்தனை வீடுகளிலும் அவர்கள் நினைவு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

Leave a Comment