அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

SHARE

குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ஓகா இடையே நாட்டின் மிகவும் நீளமான 2.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.979 கோடியில் கட்டப்பட்டுள்ள கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதனை தொடர்ந்து துவாரகாவில் கடலுக்குள் மூழ்கி இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

இந்நிலையில், அங்கு அப்படியொரு கோயிலே இல்லை என்று தொல்பொருள் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார் பதிவு செய்துள்ளார்.

கோவாவில் இயங்கி ’சில்பலோகா’ அமைப்பின் இயக்குநராக பணியாற்றி வரும் மூத்த கடல்சார் தொல்லியலாளர் மற்றும் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார், தனது முகநூலில் வெளியிட்டுள்ளதாவது, “நான் துவாரகா கடல் தொல்பொருள் ஆய்வில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பங்கேற்றேன். கூடுதலாக கடலோர அகழ்வு மற்றும் கணக்கெடுப்பிலும் தீவிரமாக பணியாற்றினேன். கடற்கரையில் தொல்பொருள் ஆய்வு பரபரப்பாக நடந்தது. துவாரகா மற்றும் பேட் துவாரகாவில் (கடலடி ஆய்வு) சுமார் 5 மணி நேரம் ஆய்வில் பங்கேற்றேன்.

துவாரகா பண்டைய காலம். அதனால் நிறைய கல் நங்கூரங்கள் (stone anchors), கட்டிட கல் குவியல்கள் கிடைத்தன. ஆய்வு காலத்தில் அதே கல் துண்டுகளை சேர்த்து செயற்கை சுவர்கள் கட்டப்பட்டது!! அங்கு எந்த கோயில் இடிபாடுகளும் காணப்படவில்லை!! யூட்யூபில் வரும் வீடியோ காட்சிகள் 59% போலி செய்திகள் (அனிமேட்டட்)தான்.

எனது 3 வருட ஆய்வில், மகாபாரத காலத்தின் மிச்சங்கள் கிடைத்தால், நாம் பின்வாங்கி இருக்கலாம்!! ஆனால், பொய்யின் உச்சத்தை நோக்கி இந்த நாடு செல்வதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இப்போது இதையெல்லாம் அரசியலுக்கு பயன்படுத்துவதைப் பார்த்தால் வாந்தி வருகிறது.என் தேசம் மகத்தானது!” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

இந்த வயசுகாறவங்க கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்க வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

Leave a Comment