சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

SHARE

விரைவில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆனால் ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு.

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சுங்க சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், சுங்கச் சாவடிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதாகவும், இதன்படி சுங்கச் சாவடிகளில் வண்டிகள் நின்று கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணங்களைப் பெறும் வழிமுறைகளை ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி ஒவ்வொரு சாலையிலும் அதன் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுப் பகுதியில் கேமராக்கள் இருக்கும் என்றும், அந்தக் கேமராக்களில் பதிவாகும் படங்களின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி கூறி உள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் சுங்கக் கட்டணம் என்பது சாலையைப் பராமரிக்கும் அளவுக்குதான் உள்ளது. சுங்கச் சாவடியை அமைத்த குறிப்பிட்ட காலத்தில் சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் வழக்கமும் பல நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில் சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதோடு, எவ்வளவு காலம் ஆனாலும் சுங்கக் கட்டணங்கள் கைவிடப்படுவதும் இல்லை.

இதனால், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, வருங்காலங்களில் சுங்கச் சாவடிகளை நீக்கினாலும் கூட, சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் எண்ணமே மத்திய அரசுக்கு இதுவரை இல்லை என்பதையே காட்டுகிறது.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது: சீமான்

Nagappan

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் இது தான் இப்போ : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Admin

Leave a Comment