கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

SHARE

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் விழா நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு புலிவேந்துலாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் சமாதியில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த ஜெகனின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார்.

மேலும் இளம் பச்சை மற்றும் நீல வர்ணத்தில் உள்ள கட்சி கொடியும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் நடுவே தெலங்கானா மாநில வரைபடமும், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம் பெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவானதில் முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளதாகவும், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம் என்றும் நிகழ்ச்சியின் பேசிய ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

Leave a Comment