ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

SHARE

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா 2வது அலை மெல்ல குறைந்து வந்த நிலையில், தற்போது டெல்டா ப்ளஸ் வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி வழங்கியது.

இதனிடையே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கக்கோரி ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கோரியது.

இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கெனவே கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

Leave a Comment