மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

SHARE

டெல்லி விவசாயிகள், தொழிலாளிகள் மகாபஞ்சாயத்துத் தீர்மானத்தின் மீதான, SKMன் தமிழ்நாடு மாநிலச் செயற்பாட்டு குழுவின் அறைகூவல் என்று தலைப்பிட்டு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் SKM பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் மார்ச் 14 அன்று, SKM நடத்திய விவசாயிகள் தொழிலாளிகள் மகா பஞ்சாயத்து விடுத்த அறைகூவல் :-

“கார்ப்பரேட் கொள்ளையில் இருந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க, இந்தியாவின் மதச்சார்பற்ற, சனநாயக, அரசியலமைப்பைப் பாதுகாக்க போராடிவரும் விவசாயிகள், தொழிலாளிகளின் இயக்கத்தை, பாஜகவிற்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் போராட்டமாக மாற்றுங்கள்.

கார்ப்பரேட் கிரிமினல் மற்றும் ஊழல் கூட்டை அம்பலப்படுத்துங்கள்; இந்திய குடியரசின் சனநாயக, மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சி தன்மையின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களுக்காக பாஜகவை தண்டிக்க அணி திரளுங்கள்”.

மகா பஞ்சாயத்து விடுத்த இந்த அறைகூவலை விரிவாக, 18.03.2024 இணையவழி நடைபெற்ற மாநில செயற்பாட்டுக் குழு விவாதித்தது.

“தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற சூழலில், SKMஇல் உள்ள விவசாய அமைப்புகள் அனைத்தும் வெவ்வேறு வடிவங்களில் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன”.

“மற்றொருபுறம் தமிழ்நாட்டில் உள்ள சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சட்டத்தையும், சனநாயகத்தையும் காப்பாற்ற பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன”.

இந்தச் சூழலில் சிவில் சமூகங்களோடு இணைந்து SKMன் அறைகூவலை நிறைவேற்றும் வகையில், பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக இந்தப் பிரச்சாரத்தை சிவில் சமூகங்களுடனும், அனைத்து பிரிவு மக்களுடன் இணைந்து நடத்த வேண்டும்; அதற்கான அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று, SKMன் மாநிலச் செயற்பாட்டு குழு கேட்டுக் கொள்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

Leave a Comment