ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

SHARE

தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் இருந்ததற்காக அம்மனுக்கு கூழ் ஊற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் காப்பாற்றியதாக ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் 101 குடங்களில் மேளதாளம் முழங்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது.

மேலும் கூழ் ஊற்றி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஊர் அடங்கை மீறி கூடியதாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

Admin

Leave a Comment