தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

SHARE

புலவா் இரா. இளங்குமரனாா் (94), உடல்நலக் குறைவு காரணமாக மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானாா்.

திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜனவரி 30 ஆம் தேதி பிறந்த இளங்குமரனாா்திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946 ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ் ஆசிரியரக தனது தமிழ் வளர்ச்சி பணியினை தொடங்கினார்.

நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளாா்.

மதுரை அங்கையற்கண்ணி ஆலயத்தில் 1958 இல் ‘குண்டலகேசி’ எனும் நூலை வெளியிட்டாா்.அதனை தொடா்ந்து, திருக்கு கட்டுரைத் தொகுப்பு எனும் நூலை 1963 ல் பிரதமா் நேரு வெளியிட்டாா்.

சங்க இலக்கிய வரிசையில் புானூறு எனும் நூலை 2003 ல் அப்போதைய குடியரசு தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டாா் அதனை தொடர்ந்து எங்கும் பொழியும் இன்பத்தமிழ், திருக்கு தமிழ் மரபு என்பன உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் திருச்சியில் திருவள்ளுவா் தவசாலை எனும் தமிழ் ஆராய்ச்சிக் கூடத்தை நடத்தி வந்தாா்.குறிப்பாக தமிழ்வழி திருமணங்களையும் அதிகளவில் நடத்தி வைத்துள்ளாா்.

இவரது தமிழ் சேவையைப் பாராட்டி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தமிழ் செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளன. தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இளங்குமரனாரின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

2 comments

solalvallan July 27, 2021 at 12:15 pm

Great Tamil Scholar.

Reply
solalvallan July 28, 2021 at 10:34 am

May his soul rest in peace. His regional words collection are brought online at solalvallan.com

Reply

Leave a Comment