மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

SHARE

புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

அப்போது தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி ) அமலுக்கு வருகிறது.

இதனால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இனி 20% சிறப்பு வரி சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. மதிப்பெண்களில் திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு.!!

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

Leave a Comment