விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது வாக்குமூலம் அமைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/08/b5dc1d9682b0d9912f123a281ad35f03c1c6fe8b09f932e3f6bf0b1d38482870.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/08/b5dc1d9682b0d9912f123a281ad35f03c1c6fe8b09f932e3f6bf0b1d38482870.jpg)
அதேசமயம் வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.
இதில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக 2 வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார்.
இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள தாய் வீட்டில் துளசியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் ஆறு பேர் கொண்ட தனிப்படை சென்னை சென்றுள்ளது.