மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

SHARE

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் அதிமுக, பாஜக, திமுக கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று முதல் மனுத்தாக்கல் செய்யலாம்.

நீங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டுமானால் செய்ய வேண்டியது என்ன?

விண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்குமூலம்: வேட்பு மனு தக்கல் செய்யும் போது படிவம் 26-கீழ் தன் மீது உள்ள வழக்குகள் விவரங்கள், பான் எண், சொத்து விவரங்கள், கடன், தொழில், கல்வித் தகுதி போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றைச் சரியாகச் செலுத்தி வருவதற்கான ஆவணங்கள், 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருதற்கான சான்றிதழ் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசியல் கட்சிக்குக் கீழ் நிற்கும் வேட்பாளர்கள் படிவம் A மற்றும் படிவம் B-ஐ வேட்பு மனுவுடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகைக்கான வரைவோலை (டிமாண்ட் டிராஃப்ட்) இணைக்க வேண்டும்.

உறுதிமொழி: மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதற்கான உறுதியை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் செய்பவருக்கு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், உடன் வர 4 பேருக்கு மட்டுமே அனுமதிக்க வழங்கப்படும். தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். விடுமுறை நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு அதற்கான ஒப்புகை படிவம் 6, தேர்தல் நடத்தை விதி படிவம் 9, தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரங்கள் போன்றவற்றை வேட்பாளர்களைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வேட்பாளர் தங்களது மாதிரி கையொப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர் பெயர் வேறு தொகுதியில் உள்ளது என்றால் அதற்கான அத்தாட்சி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

Admin

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

Leave a Comment