‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

SHARE

கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம். எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எழும்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்த மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது , கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. அனைத்து வயதினருக்கும் பாதிக்கும். இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் கூட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த அலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்பதினால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கபடலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும்.

மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் குறைந்தது 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 25 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்காக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

Leave a Comment