பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

SHARE

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமின் வழங்கியுள்ளது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே இவ்வழக்கு குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், 400 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இன்று சிறப்பு டிஜிபி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இதனைதொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 16ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போய்ட்டு வர்றோம்” – ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற்றம்…

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனையுடன் ஜாமின்!

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

Leave a Comment