மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

SHARE

அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் பவானி தேவி டோக்கியோ மாநகரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாவார். முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் இவர் வென்றார்.

இதனால் இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதினார். அவருடன் 7/15 என்ற கணக்கில் தோல்வியினை தழுவினார் இதனால் வாள்வீச்சில் இந்தியாவிற்கான பதக்க கனவு கலைந்தது.தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், ” இது எனக்கு மிகப் பெரிய நாள். உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். நான் என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமளித்தஅனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

அக்னி பரீட்சையாகவே ஆட்சிக்காலம் முழுவதும் அமைந்து விட்டது- எடியூரப்பா கண்ணீர்

Admin

குறைதீர்க்கும் அதிகாரியினை நியமித்தது ட்விட்டர்!

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னாரா சசிகலா? விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்… ஜெயக்குமார் கிண்டல்

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment