பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

SHARE

நமது நிருபர்

சீனா, இந்தியா, வங்க தேசம் ஆகிய நாடுகளிடையே ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்ட உள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது.

ஆசிய கண்டத்தில் ஓடும் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்ம புத்ரா. இந்தியாவில் ஓடும் நதிகளில் ஆணின் பெயர் கொண்ட ஒரே நதி என்ற பெருமையும் இதற்கு உண்டு. 

தற்போது சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக உள்ள திபெத்தில் தொடங்கி சீனா வழியாக வந்து, இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்து, வங்க தேசம் வரையில் பாயும் பிரம்மபுத்ரா நதியால் 3 பெரிய நாடுகள் பயனடைகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் நீர் வளத்துக்கு பிரம்மபுத்ராவையே நம்பி உள்ளன.

பிரம்மபுத்ரா நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும் இடத்திலேயே ஒரு அணையைக் கட்டி நதியைத் தடுக்கு ஒரு திட்டத்தைக் கடந்த ஆண்டு சீன அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் குறித்த எதிர்ப்பை இந்தியாவும் வங்க தேசமும் சீனாவுக்கு தெரிவித்தன. இதனால் தனது முடிவில் இருந்து சீனா பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போது தனது 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ள சீனா, பிரம்ம புத்ரா நதியில் அணையையும் நீர் மின் நிலையத்தையும் கட்ட உள்ளதாக அந்தத் திட்டத்தில் தெரிவித்து உள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் பிரம்மபுத்ராவில் அணை கட்டும் பணிகளைச் சீனா தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியா, வங்க தேசம் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

Leave a Comment