ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

SHARE

ட்விட்டரில் அதிமுக நிர்வாகிகளாலும் ஆதரவாளர்களாலும் பரப்பட்டு வரும் தனியடைவான புறக்கணிப்போம்_புதியதலைமுறை கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக, அர்சியல் உள்நோக்கங்களோடு வெளிவரும் எந்த ஒரு ட்விட்டர் பிரசாரத்தையும் மெய்யெழுத்து பொருட்படுத்துவது கிடையாது. ஆனால், இந்த முறை நடத்தப்படுவது வன்மமான பிரசாரம் என்பதால் இதுகுறித்த பொது விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.

முதலில் விவகாரம் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், மாநிலங்கள் வாரியாக, சிறப்பு நிகழ்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று (26.02.2024) வெளியாயின. புதிய தலைமுறையின் ஆங்கிலப்பிரிவான ஃபெடரல் இணையதளத்துக்காக மற்றும் ஏபிடி (APT) நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு இது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த் கருத்து கணிப்பில், தமிழ்நாட்டில் கட்சி வாரியாக அவர்கள் பெறப்போகும் உத்தேச வாக்கு விகிதங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் திமுக38.33% பாஜக 18.48% மற்றும் அதிமுக 17.26% என்று குறிக்கப்ப்பட்டிருந்தது.

இதுதான் அதிமுகவை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. அதிமுகவை விட பாஜக அதிகமான வாக்குகள் வாங்கும் என்கிற கருத்து கணிப்பை விமர்சிப்பது என்பதைக் கடந்து நிறுவனம், நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலரையும் ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர்.

எந்த விதத்திலும் தேர்தல் கருத்து கணிப்புகளின் மீது நம்பிக்கையோ அல்லது பற்றோ எனக்கு இல்லை. அதே சமயம், தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல பாழ்பட்டு வரும் பொதுவெளி நாகரிகம் குறித்த அக்கறை எனக்கு உண்டு. பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற காலம் முதலே பொதுவெளி நாகரிகம் கேலிக்கூத்தாகவே இருக்கிறது. அண்ணாமலைக்கு முன்பும் இப்படியான தலைவர்க இருந்ததுண்டு. ஆனால், ஒரு கட்சியின் முதல்கட்ட தலைவராக இருக்கும் ஒருவர், தரம் தாழ்ந்த விமர்சனங்களை பொதுவெளியில் பேசுவது என்ற வழக்கத்தை பிரபலப்படுத்தியவர் அண்ணாமலை தான். இந்த வழக்கம் மேலும் மேலும் தொடர்வதையும் அவரது ‘வார் ரூம்கள்’ பின்பற்றி வருகின்றன.

இப்போது புதிய தலைமுறை விவகாரத்திலும் அதையே பின்பற்றுகின்றன அதிமுக ஐடி பிரிவுகள். கருத்துக் கணிப்புகளில் முரண் ஏற்படும் பட்சத்தில், கருத்துக் கணிப்பு செய்யப்பட்ட முறைமை, அதன் தொகுக்கப்பட்ட விதம், வெளியீட்டு முறைகள் உள்ளிட்டவற்றின் குறைகளை சுட்டிக்காட்டி, இது ஒரு உண்மையற்ற கருத்துக்கணிப்போ என்றோ உள்நோக்கம் கொண்ட கருத்துகணிப்பு என்றோ நிறுவ முயற்சிக்கலாம்.

ஆனால், நிறுவனத்தின் பிரதிநிதிகளையோ தலைவர்களையோ குறிவைத்து தனிமனித தாக்குதல் செய்வதென்பது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அவல அரசியலின் ஒரு பகுதி. இதில் அதிமுகவும் இத்தனை ஆர்வமாக பங்கெடுப்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது.

ஒரு புள்ளியில் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார்த்தால், துளியும் ஆக்கமற்ற நடவடிக்கைதான் இது. ’எங்களைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டாயா, உன்னை அவமானப்படுத்துகிறேன் பார்’ என்ற நோக்கம்தான் இது. இந்த நொக்கத்தின் விளைவாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் அதை பரப்பும் நபர்களுக்குதான் பின்னடைவாக அமைபும்.

அதிமுக தன் வாக்கு வங்கி குறைந்ததாக யாரும் எண்ணக்கூட கூடாது என்று நினைத்தால், அதற்கு வெறுப்பு பிரசாரம் வழியல்ல.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

‘‘மனசு கஷ்டமா இருக்கு இனி நாங்க வர மாட்டோம்” : ஓபிஎஸ், ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

Leave a Comment