ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

SHARE

தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் ரேஷன் கடைகளும் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 8 ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த நேரம் மாற்றம் அமலுக்கு வருவதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை ஜூன் 15 ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

Leave a Comment