வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

one village one product
SHARE

ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இன்று (20..02.2024) சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சொல்வது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளுடன் தொடங்கிய இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க அம்சங்கள் இருந்த நிலையில், ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற திட்டம் கூடுதல் கவனம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் 15,280 வருவாய் கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம வாரியாக, முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களின் சாகுபடிக்கான நவீன உதவிகளையும் மானியங்களையும் வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

இதற்கு முன்னதாக மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆட்சியின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தின் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்த திட்டம் என்கிறார் பிகார் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஆதிஷ் பரஷார்.

அதே சமயம், நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால் இந்த திட்டத்தை அம்மாநில அரசால் தொடர முடியாமல் போனது என்றும் சுட்டிக்காட்டினார்.




SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

சாக்லேட் குறித்த ரகசியங்கள்..! – உலக சாக்லேட் தின சிறப்புக் கட்டுரை.

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

இனிமே மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவுக்கு ரூ.600 இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

Leave a Comment