கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

SHARE

தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் வழிகாட்டுதல் படி தமிழகத்தில் அகழாய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்படியாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்றின் படம் வெளியாகி உள்ளது.

பண்டைய காலத்தில் ஆண், பெண் சிற்பங்களைச் செதுக்கும் பணியின் போது அவற்றை வேறுபடுத்திக் காட்ட தலை அலங்காரம், புருவம், கண், நெற்றி ,உதடு காதணி, ஆடைகள், கைகளில் வைத்திருக்கும் பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றை வைத்தே ஆண், பெண் என வேறுபடுத்திக் காட்டுவார்கள்.

தற்போது கிடைத்துள்ள இந்த கழுத்தளவு சிலையினை ஆணா பெண்ணா என்று பார்ப்பதற்கு காதணி, நெற்றி, கண், மூக்கு சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்ய முயற்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் சிகை அலங்காரம் (கொண்டையை) வைத்து சில கருத்துக்களை பகிர வேண்டி உள்ளது.

பொதுவாக ஆண்களுக்கான கொண்டையானது மேல் முகமாக தூக்கி இருக்குமாறு அமைக்கப்படும்.

பெண்களுக்கான கொண்டை எனும் பொழுது தலை மட்டத்திலும் அல்லது அதற்குக் கீழாகவும் இருக்குமாறு காட்டப்படும் .

அதற்கு காரணம் பொதுவாக பெண்களுக்கான கூந்தலானது ஆண்களைவிட அதிக அளவு இருப்பது இயல்பு .

அந்த வகையில் அதிக பாரம் கொண்ட முடியை தூக்கி கட்டும்பொழுது இயல்பாகவே சரிந்து இருக்கும்.

குறைவான கூந்தலை தூக்கி கட்டும்பொழுது தலைக்கு மேலே நிற்கும் எனும் காரணத்தால் சிற்பியானவர் பெண் கூந்தலை தலை மட்டம் அல்லது அதனை விட கீழ் நோக்கியோ இருக்குமாறு அமைப்பார்.

இதன் காரணத்தால் இந்த அகரம் அகழாய்வில் கிடைத்த சிற்பத்தை பெண் சிற்பமாக இருக்கலாம் என சிற்பிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த சிற்பத்தின் கீழ்ப் பகுதியும் கிடைக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்து ஆணா பெண்ணா என உறுதியிட்டு கூறலாம்.

இதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

Leave a Comment