கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

SHARE

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த புதிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்

அதில் தொல்லியல் துறை மேம்பாடு குறித்த சில அறிவிப்புகள் வெளியிட்டார் அதன்படி

சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

அகழாய்வில் கண்டறியப்பட்டவற்றைப் பாதுகாக்க, அந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

கீழடியில் உலகத் தரத்திலான திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அதைவிட கூடுதலாக 6 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – என்று பிடிஆர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கியங்களில் தமிழர்கள் பல வெளிநாடுகளோடு வர்த்தகம் செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதெல்லாம் உண்மைதான். என்பதை அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை ஒரே நேரத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி வருகின்றது. ஆனால் இன்னும் நூற்றுக் கணக்கான இடங்கள் அகழாய்வுக்குக் காத்து இருக்கின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment