உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

SHARE

இந்தியாவிலுள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊடக செய்தியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இயங்கி வரும் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகசஸ் என்கிற மென்பொருள் வாயிலாக பல்வேறு நாடுகளிலுள்ள முக்கிய ஆட்களின் செல்போன் பேச்சுவார்த்தை, புகைப்படங்கள், உள்ளிட்ட வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக திடீர் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ்’ என்று செய்தி நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ‘தி வையர்’ செய்தி நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்க்டன் போஸ்ட், தி காரிடியன் உள்ளிட்ட 17 செய்தி நிறுவனங்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளன.

அந்த ஆய்வில் இந்தியா, சவுதி அரேபியா, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ஐக்கிய அரபு, எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன் எணிகள் இருந்ததாக வையர் ஊடகம் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்கட்சித் தலைவர்கள், 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், ஒரு நீதிபதி ஆகியோருடைய எணிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட நாட்டின் பல்வேறு சமூக ஆர்வலர்களுடைய செல்போன் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் மென்பொருள் நிறுவனம் தங்கள் தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளுடைய அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாத செயல் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

Leave a Comment