Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

SHARE

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

பிரேசிலில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் மற்றும் அவரது கணவர் பைக்கில் உலகை சுற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

இதுவரை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவுக்கு வருகை தந்த இவர்கள் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட பின் இறுதியாக ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.

மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர்கள் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் கூடாரத்திற்குள் நுழைந்து, அந்த பெண்ணின் கணவரை தாக்கி, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் நடந்ததைக் கூற, அவர்கள் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.


தகவல் அறிந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, குற்றவாளிகள் அடையாலம் காணப்பட்டு, இதுவரை 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் கண்ணீர் வீடியோ வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

https://www.instagram.com/reel/C4AE0nlPeto/

நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தும் இது போன்ற இழிவான செயலில் ஈடுப்பட்ட குற்றவாளிகளுக்கு எப்படிபட்ட தண்டனையை அரசு வழங்கப்போகிறது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Written by Gowsalya


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

Leave a Comment