கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

SHARE

கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தின. மேலும் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.


தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்நிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


அண்மையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால், இளம்பருவத்தினருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.


இந்தநிலையில், இது தவறான தகவல் என்றும், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசிகளானது விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

Leave a Comment