கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

SHARE

கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தின. மேலும் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.


தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்நிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


அண்மையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால், இளம்பருவத்தினருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.


இந்தநிலையில், இது தவறான தகவல் என்றும், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசிகளானது விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

Leave a Comment