அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

SHARE

தன்னை திருமணம் செய்வதாக கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யக் கூறியதாகவும் இதனால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.இதனையடுத்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்ததாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. எனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் தலைமறைவாகி இருப்பதாக வந்த தகவல் கிடைத்து. இதனையடுத்து 2 தனிப்படை போலீசார்,மதுரைக்கு விரைந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீசார்,பெங்களூரில் இன்று கைது செய்துள்ளனர்.மேலும்,அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

Leave a Comment