கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

SHARE

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் இச்சூழலில் தங்கள் உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. 

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான விளைவுகளை உருவாக்கி உள்ள நிலையில், வட மாநில மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்தியாவின் நிலையைக் கண்டு பல நாடுகள் உதவி செய்ய முன் வந்த நிலையில் ஐநா சபையும் தனது உதவி கரத்தை நீட்டி இருந்தது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டதாக தனது வருத்தத்தை ஐ.நா. வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக் கருவிகளை வழங்க ஐ.நா. தயாராக இருந்ததாகவும். ஆனால் இந்திய அரசு தற்போது போதுமான மருத்துவக் கருவிகள் உள்ளதால் ஐ.நா.வின் உதவியை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-சின் துணை செய்தி தொடா்பாளா் பர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. தனது உதவியை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தேவைப்படும்போது இந்தியா இந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் மடியும் இச்சூழ்நிலையில் ஐநாவின் உதவியை இந்தியா நிராகரித்தது சரியா? – என பல தரப்பு மக்களும் இந்திய அரசின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

8 சிங்கங்களுக்கு கொரோனா!

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

Leave a Comment