வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

SHARE

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் ஆகின்றன. அதனால் இதை விவசாயிகள் கறுப்புதினமான அனுசரிக்கின்றனர். 

டெல்லி.

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவை கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதும், சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தப் போராட்டம் தொடங்கி இன்றோடு 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்களை உள்ளடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளின் இந்த போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கொரோனா விதிகளைக் கருத்தில் கொண்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் இன்று தங்கள் வீடுகளில் இருந்தபடியே கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

Leave a Comment