வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

SHARE

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் ஆகின்றன. அதனால் இதை விவசாயிகள் கறுப்புதினமான அனுசரிக்கின்றனர். 

டெல்லி.

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவை கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதும், சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தப் போராட்டம் தொடங்கி இன்றோடு 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்களை உள்ளடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளின் இந்த போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கொரோனா விதிகளைக் கருத்தில் கொண்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் இன்று தங்கள் வீடுகளில் இருந்தபடியே கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

Leave a Comment