இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

SHARE

இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்குப் பின்பு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம். சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கமும் அதுதான்.

இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இருந்து திரும்பிய பின்னர் நீரஜ் சோப்ராவுக்கு நிறைய மரியாதைகள் செய்யப்பட்டன. பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்பட்டார்.

இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் போது நீரஜ் சோப்ராவுக்கு சந்தோஷம் தரும் செயல்களாகத் தோன்றினாலும் உண்மை அப்படி இல்லை!. இந்த அமளிகளால் தனது விளையாட்டுப் பயிற்சி தடைபட்டு உள்ளதாக நீரஜ் ஒரு பேட்டியில் கூறி உள்ளது ஊடகங்களையும் மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா, “ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் இந்த மாத இறுதியில் நடக்கும் டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்க இருந்தேன். ஆனால் தொடர் பாராட்டு நிகழ்ச்சிகளால் விளையாட்டுப் பயிற்சியில் என்னால் பங்கேற்க இயலவில்லை. எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டது, இதனால் எனது உடல் தகுதி குறைந்துள்ளதாக நான் கருதுகிறேன். முழு திறனோடு இல்லை என்பதால் நான் டைமண்ட் லீக் போட்டியில் இருந்து விலகியும்விட்டேன்.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மற்ற நாட்டினர் அனைவரும் டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இந்த நிலை மாற வேண்டும். நாம் ஒரெ ஒரு தங்கப் பதக்கத்தோடு திருப்தி அடையக் கூடாது” – என்று கூறி உள்ளார்.

ஒரு விளையாட்டு வீரராக அவர் கூறிய கருத்துகள் மிகச் சரியானவை என்பதை இந்தக் கருத்துக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் காட்டுகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment