8 சிங்கங்களுக்கு கொரோனா!

SHARE

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

ஹைதராபாத், தெலங்கானா.

கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது விலங்களிடமும் கொரோனா தொற்று பரவி வந்தது. பூனை, நாய் போன்ற மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வீட்டு விலங்குகளுக்குப் பரவிய கொரோனா இப்போது சிங்கங்களையும் விட்டுவைக்கவில்லை. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில்  8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. 

நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் அவற்றின் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையமான சிஎஸ்ஐஆர் அமைப்பின் ராகேஷ் மிஸ்ரா ஆலோசகர் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தற்போது நலமுடன் இருப்பதாக பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

கொரோனா விலங்குகளுக்கும் வேகமாகப் பரவினால், உலகெங்கும் கொரோனா பரவல் இன்னும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளன என்பதால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெருகின்றன.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

Leave a Comment