8 சிங்கங்களுக்கு கொரோனா!

SHARE

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

ஹைதராபாத், தெலங்கானா.

கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது விலங்களிடமும் கொரோனா தொற்று பரவி வந்தது. பூனை, நாய் போன்ற மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வீட்டு விலங்குகளுக்குப் பரவிய கொரோனா இப்போது சிங்கங்களையும் விட்டுவைக்கவில்லை. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில்  8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. 

நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் அவற்றின் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையமான சிஎஸ்ஐஆர் அமைப்பின் ராகேஷ் மிஸ்ரா ஆலோசகர் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தற்போது நலமுடன் இருப்பதாக பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

கொரோனா விலங்குகளுக்கும் வேகமாகப் பரவினால், உலகெங்கும் கொரோனா பரவல் இன்னும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளன என்பதால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெருகின்றன.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

இந்த வயசுகாறவங்க கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்க வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

Leave a Comment