சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

SHARE

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஓர் அங்கமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று ( ஏப்ரல் 23 ) நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரைக்குப் புறப்பட்டார்.

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22-ம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார். இதற்கிடையில், அழகர்கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாள் கோவில் வரை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 480-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, பொதுமக்களின் வரவேற்பை அழகர் பெற்றுக் கொண்டார்.

மதுரை சித்திரை திருவிழா.

பின்னர், இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 23) அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார்.

வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ‘கோவிந்தா’ முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அழகருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கி, கொண்டாட்டமாய் வழிபட்டனர்.

பக்தர்கள் அதிகமாக திரண்டதால், அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், சுமார் 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

Leave a Comment