மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

SHARE

வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தோ்தல் தேதி இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநிலத்தில் உள்ள பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. மற்றொருபுறம் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பராடா மைதானத்தில் இன்று நடைபெற்ற மெகா பேரணியில் வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

அப்போது 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்புர் தொகுதியிலும், கிர்த்தி ஆசாத் பர்தமான்-துர்காபுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் கிருஷ்ணாநகர் தொகுதி வேட்பாளராக மஹூவா மொய்த்ரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்கள் உள்பட 16 சிட்டிங் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் தொகுதி குறித்து பேசுவதற்கு முன் இந்தியா கூட்டணியோடு சேர வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தனித்து போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார் மமதா பானர்ஜி.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது : பேரவையில் கடுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

Leave a Comment