”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

SHARE

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சங்கல்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய பெண் பத்திரிகையாளர் ’யானா மிர்’ ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு பேசத்தொடங்கினார்.

மேலும், பாகிஸ்தானில் பெண் கல்விக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக 2012-ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டவரும், இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் குறித்துதான் யானா மிர் அந்த காணொளியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ” நான் மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் நான் என் தாயகமான இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்கிறேன். ஒருபோதும் ஓடிப்போய் உங்கள் நாட்டில் அடைக்கலமும் தேட மாட்டேன். ஆகவே நான் மலாலா யூசுப்சாய் ஆக முடியாது. முன்னேறி கொண்டிருக்கும் என் தாயகத்தினை ஒடுக்கப்பட்டதாக கூறும் மலாலாவின் கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

சமூக ஊடகங்களில் மூலம் பரவும் இது போன்ற கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அதனை பரப்புகிறவர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அடக்குமுறை குறித்தான கட்டுக்கதைகளை மட்டும் உருவாக்குகிறீர்கள். எனவே இந்தியாவை மதத்தின் அடிப்படையிலே பிரித்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.

பத்திரிகையாளர் யானா மிர்

இந்த நிகழ்ச்சியின் மூலம் இங்கிலாந்து , பாகிஸ்தானின் உள்ள அதவாது எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் சர்வதேச மனித உரிமை மன்றங்களில் எங்களின் நாட்டை இழிவுப்படுத்துவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எனவே இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியை நிறுத்துங்கள். பயங்கரவாதம் போன்ற காரணங்களால் எங்களின் தாய்மார்கள் தங்களின் மகன்களை இழந்து ஏற்கெனவே வாடுகிறார்கள். ஆகவே எங்கள் காஷ்மீரை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இவரின் அனல்பறக்கும் பேச்சு பலரின் கவனத்தினை பெற்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

மேட்ச் பிக்சிங் இல்ல பர்ச்சேஸ் பிக்சிங் செய்துள்ளது அதிமுக : சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

Leave a Comment