கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

SHARE

ஜப்பான் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்தாண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார். அதுவே அவருக்கு சோதனைக் காலமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.

கடந்தாண்டு 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஜப்பானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

கொரோனாவை சரியாக கையாளத் தவறிய தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜப்பானின் பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரே பதவி வகிப்பது வழக்கம். சுகாவின் இந்த முடிவு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

கொரோனா தடுப்பூசி எடுக்கலைனா கைது தான் .. எச்சரிக்கும் அதிபர் எங்கு தெரியுமா?

Admin

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

Leave a Comment