எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

SHARE

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி விட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக அரசு நிற்கிறது. இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை படிப்படியாக நாடு முழுக்க இன்ந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, 3, 4,5 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதலே பூதிய கல்விக்கொள்கையின் படி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்திய கல்வி அமைச்சகம்.

அதன்படி, முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். யூ.கே.ஜி வகுப்புக்கும் 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் ஆகிய அறிவுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டன.



அத்துடன், “வரும் கல்வியாண்டு முதலே 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக்கொள்கையின் படியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று இந்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டே 2 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாடு இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிக்கைகள் வெளியிட்டதோடு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு மௌனமாக எதிர்ப்பைப் பதிவு செய்தபடி, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திவிட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. இதுகுறித்து, மெய்யெழுத்துடன் பேசிய கோவையைச் சேர்ந்த கல்வியியலாளர் ஈஸ்வரன், “ஒருபோதும் இதை அமல்படுத்தக் கூடாது ” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ பாடத்திட்டம் என்பது அந்தந்த மாநிலங்களுக்குட்பட்ட அறிவுசார் செயல்பாடாக இருக்க வேண்டுமே ஒழிய, இந்திய அரசாங்கம் இதை ஓர்மைப்படுத்த நினைப்பதன் நோக்கம் என்ன? தமிழ்நாடு அரசு நிச்சயமாக இதை அமல்படுத்தாது என்று நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் நிலப்பரப்புக்கேற்ப பாடத்திட்டத்தை உருவாக்கும் அங்கீகாரம் இருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் டெல்லியில் அமர்ந்து கொண்டு இந்திய அரசுதான் முடிவு செய்யும் என்றால் எதற்காக மாநிலங்கள் என்ற அமைப்பு இருக்க வேண்டும்? எங்கள் குழந்தைகள் எங்கள் கிராமங்களில் என்ன படிக்க வேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்து கொண்டு 10 பேர் முடிவு செய்வார்கள் என்றால் பிரச்னைகள் தான் அதிகரிக்கும்.

ஈஸ்வரன் வேலுச்சாமி, கல்வியியலாளர்

அதிகாரப் பகிர்வு இல்லாமல் போனால் நிறைவான வளர்ச்சி இருக்காது. பஞ்சாயத்து நிர்வாகம், வங்கிகளில் கல்விக்கடன்ன் வழங்கும் அதிகாரம் ஆகியவற்றில் அதிகாரங்களை பகிர்ந்தளித்தன விளைவாக வளர்ச்சியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு கண்டுள்ளது. கல்விக்கொள்கை விவகாரத்திலும் மாநிலங்களுக்கு அந்த உரிமை அவசியம்” என்று தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

Leave a Comment