ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

SHARE

ஜெயலலிதா மரண வழக்கில் 90% விசாரணை முடிந்துவிட்டதாக ஆறுமுக சாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைவழிநடத்திய ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பான விசாரணையை நடத்த அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் இருந்து ஜெயலலிதா மரணத்தின் இருக்கும் மர்மம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது இதுவரை 11 முறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விசாரணை ஆணையம் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் 90 சதவீத விசாரணை முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

Leave a Comment