மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

SHARE

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் மரங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் காகிதமில்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இம்மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இந்த நிலையில்திமுக அரசின் முதல் பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பே அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத் தலைவர் அப்பாவு அமருமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தவுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன்

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று விமர்சித்துள்ளார்.

கடந்த 9ஆம் தேதி நிதியமைச்சரால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை மஞ்ச கடுதாசி என காட்டமாக கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

புதிய மத்திய அமைச்சரவை..யார் யாருக்கு என்னென்ன பதவி !

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Admin

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

‘கொங்குநாடு’கோரிக்கை: இலக்கிய ஆதாரத்தை தவறாக பதிவிட்ட வானதி சீனிவாசன் !

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

Leave a Comment