CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

SHARE

அறிவுள்ள மக்களிடம் யாரும் மோசமான பொய்களைப் பரப்பி ஆட்சி செய்ய முடியாது. ஆனால், உண்மையை சரிபார்ப்பதற்காக அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பும் கூட கடமைக்கு பதில் சொல்லும் நிலைமைதான் தமிழ்நாட்டில் மேலும் வருத்தமளிக்கிறது.

“சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றவர்களுக்கு இலவச பேருந்து வசதியை திமுக அரசு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அரசு இலவச பேருந்து ஏற்பாடு செய்வது விதிமீறலாகும்.”

எனவே திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது விதிமீறல் புகாரளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல் பொய்யானது என்று விளக்கும் விதமாக “ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல” என்று அரசின் உண்மை சரிபார்ர்பு குழு தரப்பில் ஒரு உண்மை சரிபார்ப்பு வெளியிடப்பட்டது.

அதில், “சிஎஸ்கே அணியே அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஆதார ரசீதுகளும் இணைக்கப்படவில்லை. ஐபிஎல் தரப்பிலிருந்து பெறவில்லை என்றாலும் போக்குவரத்து கழக தரப்பிலிருந்து பணம் பெறப்பட்ட ரசீதையாவது இணைத்திருக்கலாம். அரசாலேயே பெற முடியாத அளவுக்கு அது ரகசியமான ரசீதா என்ன?

ஏதோ அரசியல்வாதிகளின் குறிப்பு போல அதன்போக்கில் வெறும் வார்த்தைகளால் பதிலளித்தால் போதும் என்ற எண்ணத்தைதான் வெளிப்படுத்துகிறது அச்செய்தி. ஆதாரங்களற்ற இந்த ‘உண்மை சரிபார்ப்பு’ செய்தியை அவர்கள் வெளியிடுவதன் நோக்கம் உண்மையை வெளியிடுவதா அல்லது அரசுக்கு துணைபோவதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

பரவி வரும் பொய்ச்செய்திகளுக்கு மத்தியில், எந்த ஒரு பொய்யையும் ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுடையது. அதற்காகவே பிரத்யேகமாக தமிழ்நாடு அரசால் இந்தக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

Leave a Comment