அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

SHARE

குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய ஹீரோ தங்க மகன் நீரஜ் சோப்ரா தான். எங்கும் நீரஜ் எதிலும் நீரஜ் என்பது போல அனைத்து இடங்களிலும் நீரஜ் சோப்ரா பற்றிய பேச்சுக்கள் தான்.

இந்த நிலையில் நீராஜ் சோப்ராவுக்கு இன்டிகோ விமான நிறுவனம் இன்னும் ஒருவருடத்திகு விமானத்தில் பயணிக்க இலவசம் என அறிவித்துள்ளது. பிரபல கார் நிறுவனமான மகிந்திரா அவருக்கு சொகுசு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.

அதேபோல ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய், பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாய், மணிப்பூர் அரசு, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐ ஆகியவை தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் பங்கின் முன் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், ரூ .501 இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும்.

ஆனால் , ஒரு நிபந்தனை. இந்த இலவச பெட்ரோலை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என்று இருக்க வேண்டும்.

இதற்காக பெயர் குறித்த சான்றிதழை காண்பித்து இலவசமாக பெட்ரோலை வாங்கி செல்லலாம் என எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த நீரஜ் மற்றும் நீரஜ் சோப்ரா என்ற பெயருடையவர்கள் இலவசமாக ரூ. 501 மதிப்பிலான இலவச பெட்ரோலை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஆயுப் பதான், இந்த சலுகை 2 நாட்களுக்கு இருக்கும். தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில், அசல் ஆணவங்களுடன் வருவோருக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கி வருவதாக கூறினர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

சரியும் அதானி பங்குகள் வாய் திறக்காத பிரதமர்: நடப்பது என்ன?

Nagappan

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Leave a Comment