”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

SHARE

2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு 1+1 இடங்களும் தனிச்சின்னமும் கோரிக்கை வைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது மனம் மாறியது எப்படி?

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைவர் வைகோ, “நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம்” என்றார்.

மேலும், “திராவிட இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்த எங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவோம். இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம் என்று நான் கூறியிருக்கிறேன். இன்று பேச்சுவார்த்தை ஏறத்தாழ முடிந்துவிட்டது. ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி எது என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடித்துவிட்டு கூறுவதாக உறுதி கொடுத்துள்ளார்கள்.” என்றும் பேசினார்.

எந்த தொகுதி என்பதும் கூட இன்னும் முடிவாகாத நிலைதான் நீடிக்கிறது. சரி சின்ன்னம் தொடர்பாக ஏதேனும் பேசப்பட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

எந்த சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள் என்று வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாங்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” என்று கூறினார்.

அப்படியே, மாநிலங்களவையில் இடம் ஒதுக்குவது குறித்து ஏதேனும் பேசப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது பற்றி இப்போது பேசப்பட வில்லை. அதற்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன” என்று கூறினார். அதாவது, மாநிலங்களவை உறுப்பான்மை குறித்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கலாம் என்ற தொனியிலேயே அவரது பதிலும் அமைந்தது.

கடந்த முறை 1 + 1 என்று ஒப்பந்தமானதே என மீண்டும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அந்த சமயம் மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருந்தது. தற்போது 15 மாதங்கள் உள்ளது என்பதால் அந்த சமயத்தில் பேசப்படும்” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment