எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

SHARE

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருவதால் தன்னால் இரவு நேரஞஉறங்கக் கூட முடியவில்லை என அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன.

வரும் 13ம் தேதி வரை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த 16 நாள்களாக பெகாசஸ் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டம் திரும்ப பெறுதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால்,

தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் பெகாசஸ் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர்.அமளிக்கு மத்தியில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், ஆனால் சில மாநிலங்களவை உறுப்பினர் நேற்று மேஜை மேல் ஏறியதன் காரணமாக அதன் அனைத்து புனிதமும் அழிக்கப்பட்டது என்று வேதனை தெரிவித்தார்.

இதனால் நேற்று இரவு என்னால் உறங்கக் கூட முடியவில்லை என்றும் இது போன்ற அவையை நடத்த தாம் விரும்பவில்லை என்றும் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசினார்.

மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய செயல்களை கண்டிப்பதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.இதனையடுத்து மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

Leave a Comment