அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

SHARE

குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ஓகா இடையே நாட்டின் மிகவும் நீளமான 2.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.979 கோடியில் கட்டப்பட்டுள்ள கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதனை தொடர்ந்து துவாரகாவில் கடலுக்குள் மூழ்கி இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

இந்நிலையில், அங்கு அப்படியொரு கோயிலே இல்லை என்று தொல்பொருள் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார் பதிவு செய்துள்ளார்.

கோவாவில் இயங்கி ’சில்பலோகா’ அமைப்பின் இயக்குநராக பணியாற்றி வரும் மூத்த கடல்சார் தொல்லியலாளர் மற்றும் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார், தனது முகநூலில் வெளியிட்டுள்ளதாவது, “நான் துவாரகா கடல் தொல்பொருள் ஆய்வில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பங்கேற்றேன். கூடுதலாக கடலோர அகழ்வு மற்றும் கணக்கெடுப்பிலும் தீவிரமாக பணியாற்றினேன். கடற்கரையில் தொல்பொருள் ஆய்வு பரபரப்பாக நடந்தது. துவாரகா மற்றும் பேட் துவாரகாவில் (கடலடி ஆய்வு) சுமார் 5 மணி நேரம் ஆய்வில் பங்கேற்றேன்.

துவாரகா பண்டைய காலம். அதனால் நிறைய கல் நங்கூரங்கள் (stone anchors), கட்டிட கல் குவியல்கள் கிடைத்தன. ஆய்வு காலத்தில் அதே கல் துண்டுகளை சேர்த்து செயற்கை சுவர்கள் கட்டப்பட்டது!! அங்கு எந்த கோயில் இடிபாடுகளும் காணப்படவில்லை!! யூட்யூபில் வரும் வீடியோ காட்சிகள் 59% போலி செய்திகள் (அனிமேட்டட்)தான்.

எனது 3 வருட ஆய்வில், மகாபாரத காலத்தின் மிச்சங்கள் கிடைத்தால், நாம் பின்வாங்கி இருக்கலாம்!! ஆனால், பொய்யின் உச்சத்தை நோக்கி இந்த நாடு செல்வதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இப்போது இதையெல்லாம் அரசியலுக்கு பயன்படுத்துவதைப் பார்த்தால் வாந்தி வருகிறது.என் தேசம் மகத்தானது!” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை வெச்சு செய்த செந்தில்குமார் எம்.பி.,

Admin

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

Leave a Comment