தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை வெச்சு செய்த செந்தில்குமார் எம்.பி.,

SHARE

கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி” என பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு… நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும் வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும் என கூறியுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

புதிய மத்திய அமைச்சரவை..யார் யாருக்கு என்னென்ன பதவி !

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

Leave a Comment