ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

SHARE

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார்.

”நான் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியின் தொடர்பிலிருந்தவள். தற்போதுவரை நான் எந்தக் கட்சிக்கும் மாறியதில்லை. இதுதான் முதல்முறையாகக் கட்சி மாறியிருக்கிறேன். தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான செயல்பாடுகள், திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் என்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டேன். மேலும், பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச அளவில் இந்தியா மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையின் மூலம் கட்சியைச் சிறப்பாக வளர்த்து வருகிறார்.

பா.ஜ.க-வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன் இணைந்து பா.ஜ.க-வை வளப்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமை இந்திய நாட்டுக்கு முக்கியமானது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு பெண்கள் வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் இருக்கிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தேன். சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அது மறுக்கப்பட்டது. தற்போது கூட சட்டமன்றத் தலைவராக என்னை விட ஜூனியருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.


இது போன்ற அதிருப்தி நீண்டகாலமாகவே இருந்திருக்கிறது. 1999 முதல் எம்.பி தேர்தலில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சென்ற தேர்தலில் எம்.எல்.ஏ – எம்.பி தேர்தல் சேர்ந்து வந்தபோதுகூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் பல்வேறு பணிகள் அப்படியே இருக்கிறது. அதை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளவே இல்லை. என்னைப் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராவது என்னை இணைத்துக்கொண்ட கட்சி எடுக்க வேண்டிய முடிவு. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

Leave a Comment